தமிழ்நாடு (Tamil Nadu)

வாயில் வடை சுடும் அண்ணாமலை அரசியல் ஞானிபோல் பேசுகிறார் - இ.பி.எஸ். விமர்சனம்

Published On 2024-07-05 05:32 GMT   |   Update On 2024-07-05 05:32 GMT
  • 2014ல் பெற்றதை விட 2024ல் பா.ஜ.க. கூட்டணி குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளது.
  • அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்தது.

கோவை:

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததற்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

* அ.தி.மு.க. போட்டியிட்டால் 3-வது, 4-வது இடத்திற்கு வந்திருக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறார். மிகப்பெரிய அரசியல் ஞானிபோல் அண்ணாமலை பேசுகிறார்.

* அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

* மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 6000 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று 2-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. கோவையில் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்தார்.

* 2014 தேர்தலில் 18.80 சதவீத வாக்குகளை பா.ஜ.க. கூட்டணி பெற்றது. 2014ல் பெற்றதை விட 2024ல் பா.ஜ.க. கூட்டணி குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளது.

* தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் ஈரோடு தொகுதி தேர்தலில் பரிசுகள், பணம் தந்துதான் வெற்றி பெற்றது. இதனை நன்கு அறிந்த அண்ணாமலை வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை பற்றி விமர்சிப்பது கண்டித்தக்கது.

* வாயில் வடை சுடுவது, பொய் செய்திகளை பரப்புவது தான் அண்ணாமலையின் வழக்கம்.

* 100 அறிவிப்புகளை 500 நாட்களில் வெளியிடுவோம் என கோவையில் அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.

* பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில் கோவைக்கு கொடுத்த வாக்குறுதியை அண்ணாமலை நிறைவேற்றுவாரா?

* அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்தது.

* தமிழக பா.ஜ.க. தலைவரான பின்னர் என்ன திட்டத்தை மத்திய அரசிடம் கேட்டு தமிழகத்திற்காக பெற்றுத்தந்தார் அண்ணாமலை?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News