தமிழ்நாடு (Tamil Nadu)

சபாநாயகர் நடுநிலை தவறி செயல்படுகிறார்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published On 2024-06-21 05:10 GMT   |   Update On 2024-06-21 05:11 GMT
  • கள்ளச்சாராய விவகாரத்தை விட சட்டசபையில் பேச வேறு என்ன முக்கிய பிரச்சனை உள்ளது?
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் தமிழ்நாடே கொதித்துப்போயுள்ளது.

சென்னை:

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அனுமதிக்கப்பட்ட 146 பேரில் 50 பேர் பலியானதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

* கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மரில் 96 பேர் சிகிச்சை பெற்றுவருதாக செய்திகள் வந்துள்ளன. ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 19 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

* சிகிச்சை பெறும் பலருக்கு கண்பார்வை தெரியவில்லை என செய்திகள் வந்துள்ளன.

* நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம் குறித்து பேச வாய்ப்பளிக்கவில்லை.

* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் தமிழ்நாடே கொதித்துப்போயுள்ளது.

* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு.

* மக்களின் பிரச்சனை சட்டமன்றத்தில் தான் பேச முடியும். இங்கு நடப்பது ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி போல் உள்ளது.

* கள்ளச்சாராய விவகாரத்தை விட சட்டசபையில் பேச வேறு என்ன முக்கிய பிரச்சனை உள்ளது?

* சட்டசபை சபாநாயகர் நடுநிலை தவறி செயல்பட்டுள்ளார்.

* கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை நடந்துள்ளது.

* எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமாரை அலேக்காக தூக்கி கைது செய்ய முயன்றனர்.

* நிர்வாகத்திறனற்ற அரசு, பொம்மை முதலமைச்சர் என்பதால் கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News