தமிழ்நாடு (Tamil Nadu)

ஜானகி பாணியில் அறிக்கை வெளியிடுங்கள் - சசிகலாவுக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்

Published On 2024-07-05 05:45 GMT   |   Update On 2024-07-05 05:45 GMT
  • கள்ளச்சாராய சம்பவங்களை திட்டம் போட்டு தி.மு.க. அரசு மறைத்து வருகிறது.
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கள்ளச்சாராயம் பெருகிவிட்டது.

கோவை:

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* கட்சியில் உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முடியும்.

* சசிகலா 2021-ல் பதவியில் இல்லை என அறிவித்துள்ளார்.

* கட்சி மீது உண்மையில் அக்கறை இருந்தால் ஜானகி பாணியில் சசிகலா ஒரு அறிக்கையை தற்போது வெளியிட வேண்டும்.

* அ.தி.மு.க. எங்கள் தலைமையில் இருப்பதை ஏற்று சசிகலா அறிக்கை வெளியிட வேண்டும்.

* ஓ.பி.எஸ்.சை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கும் எண்ணம் ஒரு போதும் இல்லை.

*தமிழகத்தில் கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

* கள்ளச்சாராய சம்பவங்களை திட்டம் போட்டு தி.மு.க. அரசு மறைத்து வருகிறது.

* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கள்ளச்சாராயம் பெருகிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News