தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளக்குறிச்சியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கிறார் எடப்பாடி பழனிசாமி

Published On 2024-06-23 09:26 GMT   |   Update On 2024-06-23 09:26 GMT
  • நாளை மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
  • சென்னையில் ஜெயக்குமார், கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜூ ஆகியோர் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

சென்னையில் ஜெயக்குமார், கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜூ ஆகியோர் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.

Tags:    

Similar News