தமிழ்நாடு
வெள்ளம் பாதித்த வீடுகளில் மின் மோட்டார்கள் பழுதானதால் தண்ணீருக்கு மக்கள் அவதி
- மின் மோட்டார்கள் ஓடாததால் தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
- 4 நாட்களாக வெள்ளம் தேங்கி இருந்த வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிந்துவிட்டது. நேற்று மாலையில் மின் வினியோகமும் சீரானது. வெள்ளம் புகுந்த வீடுகளில் மின் மோட்டார்கள் பழுதானது. நேற்று மின் மோட்டார்களை இயக்கியபோது ஓடவில்லை. இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
மின் மோட்டார்கள் ஓடாததால் தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. 4 நாட்களாக வெள்ளம் தேங்கி இருந்த வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். சமையல், குளியல் போன்ற அடிப்படை தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். சென்னையில் பல இடங்களில் மின் மோட்டார்கள் பழுதடைந்து மெக்கானிக் கடைகளுக்கு படையெடுத்தனர்.