தமிழ்நாடு

கவர்னர் ஆர்.என்.ரவி கிறிஸ்துமஸ் வாழ்த்து

Published On 2022-12-24 05:45 GMT   |   Update On 2022-12-24 05:45 GMT
  • கிறிஸ்துமஸ் பண்டிகை நம் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தைக் வழங்கட்டும்.
  • பல்வேறு நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட் 19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக அன்புடனும், இரக்கத்துடனும் பூமியை ஆசீர்வதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. அவருடைய மன்னிப்புச் செய்தி மனிதகுலத்திற்கான விலைமதிப்பற்ற பரிசாகும். மேலும், நாம் அனைவரும் ஒரே குடும்பம், நமக்கு ஒரே எதிர்காலம் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நம் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தைக் வழங்கட்டும். பல்வேறு நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட் 19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News