தமிழ்நாடு

திருவள்ளூர் பகுதியில் கடும் பனிமூட்டம் - ரெயில்கள் தாமதம்

Published On 2022-12-27 03:55 GMT   |   Update On 2022-12-27 03:55 GMT
  • திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவியது.
  • திருவள்ளூர் மார்க்கமாக வரும் அனைத்து விரைவு ரெயில்களும் காலதாமதமாக வருவதாகவும் ரெயில்வே துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொழிவுவானது நிலவியது.

இதில் திருவள்ளூர் ஈக்காடு, புள்ளரம்பாக்கம், திருப்பாச்சூர், கனகம்மாசத்திரம், வேப்பம்பட்டு, அரண்வாயில், மணவாளநகர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

மேலும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே நிலவும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்புப் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ரெயில்கள் மெதுவாக செல்வதால் திருவள்ளூர்- சென்னை மற்றும் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.

மேலும் திருவள்ளூர் மார்க்கமாக வரும் அனைத்து விரைவு ரெயில்களும் காலதாமதமாக வருவதாகவும் ரெயில்வே துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற அதிவேக வந்தே பாரத் ரெயிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News