தமிழ்நாடு (Tamil Nadu)

சாலையில் ஏற்பட்ட பள்ளம்: நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2024-01-08 03:54 GMT   |   Update On 2024-01-08 03:54 GMT
  • போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர்.
  • சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலையின் இரு புறங்களிலும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News