தமிழ்நாடு (Tamil Nadu)

பிரதமர் மோடி, தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published On 2024-04-05 04:12 GMT   |   Update On 2024-04-05 04:12 GMT
  • நாங்கள் மோடிக்கும், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம்.
  • எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் தூக்கி மிதிப்போம்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தி.மு.க வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :-

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்துவிட்டன. இவற்றை மீட்டெடுக்க தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி , சசிகலா சிறைக்கு சென்றபோது அவர் யார் என கேட்டார். இத்தகைய குணம் கொண்ட எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் அ.தி.மு.க.விற்கும் துரோகம் செய்து விட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமாக உள்ள மோடி தமிழகத்திற்கு இதுவரை எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்திடம் இருந்து பெறும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே மத்திய அரசு திரும்பி வழங்கி உள்ளது.

நாங்கள் மோடிக்கும், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம். எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் தூக்கி மிதிப்போம். பா.ஜனதா, அ.தி.மு.க. ஆட்சியில் இழந்த தமிழக உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். நமது தலைவர் (மு.க.ஸ்டாலின்) யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமராக வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News