தமிழ்நாடு

கிராமங்கள் தோறும் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை வைப்போம்- தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

Published On 2023-03-23 07:12 GMT   |   Update On 2023-03-23 07:12 GMT
  • தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது.
  • ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க. பொறுப்பாளர்கள் அத்தகைய பலகைகளை தங்களின் பகுதியில் அமைக்க வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ந்தேதி சென்னையில் தொடங்கி பிப்ரவரி 28-ந்தேதி மதுரையில் நிறைவு செய்த 'தமிழைத் தேடி...' விழிப்புணர்வு பரப்புரை பயணம் தமிழ்கூறும் நல்லுலகில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்தேனோ, அதை விட பல மடங்கு ஆக்கப் பூர்வமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கி வணிகர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். வணிகர் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கு பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் எழுதப்பட்டிருந்த கடிதத்தின்படி வெகுவிரைவில், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் நாள் தமிழ்நாடு அரசு பிறப்பித்த 575 எண் கொண்ட அரசாணையில் இடம்பெற்றுள்ள கூறுகளின் அடிப்படையில் பெயர்ப்பலகைகளை மாற்றி அமைக்க வணிகர் சங்க பொறுப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது குறிப்பிடப்பட வேண்டிய முன்னேற்றம் ஆகும்.

மூன்றாவதாக, அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களில் எவையெல்லாம் தனித்தமிழ் சொற்கள், எவையெல்லாம் பிறமொழி கலப்புச் சொற்கள் என்பதை நமது மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும். தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க. பொறுப்பாளர்கள் அத்தகைய பலகைகளை தங்களின் பகுதியில் அமைக்க வேண்டும். அந்த பலகைகளின் திறப்பு நிகழ்வை அனைவரும் அறியும் வகையில் எளிதாக நடத்த வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

Tags:    

Similar News