தமிழ்நாடு (Tamil Nadu)

விக்கிரவாண்டி தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ம.க. வெற்றி பெறும்- ராமதாஸ்

Published On 2024-07-11 06:04 GMT   |   Update On 2024-07-11 06:04 GMT
  • மாதந்தோறும் மின் கட்டணத்தை செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும், இதனை தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் அத்துமீறலையும், தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தையும் கடந்து பா.ம.க. வெற்றி பெறும். கப்பியாம்புலியூரில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தொரவியில் டி.எஸ்.பி. ஒருவர் பா.ம.க.வினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். காவல்துறையினர் தி.மு.க.வினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையும் கடந்து பா.ம.க. 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்.

தமிழகத்தில் அரசியல் படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு என கேட்கும் நிலை உருவாகியுள்ளது. சென்னையில் காவல் அதிகாரிகள் பணிமாறுதல் செய்யப்பட்டது மட்டும் போதுமானதல்ல. 15 நாட்களுக்கு ஒருமுறை உள்துறை மற்றும் காவல்துறையினருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்தவேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதியில் உள்ள காவல் அதிகாரிதான் பொறுப்பு என அறிவிக்கவேண்டும்.

மாதந்தோறும் மின் கட்டணத்தை செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும், இதனை தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி, மதுரை சிங்காநல்லூர் கொலைகளுக்கு மதுதான் காரணம். இந்திய குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது. குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு. குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கத்தை ஏற்படுத்தும் அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News