தமிழ்நாடு (Tamil Nadu)

40 நாட்களுக்கு நிறுத்தப்படும் ரோப் கார் சேவை

Published On 2024-10-01 13:37 GMT   |   Update On 2024-10-01 13:37 GMT
  • பக்தர்கள் ரோப் கார் சேவை மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
  • படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் ரோப் கார் சேவை மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர பராமரிப்புக்காக ரோப் கார் சேவை வருகிற 7-ந்தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாகவும் படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News