தமிழ்நாடு

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவி: முதலமைச்சருக்கு நிலத்தரகர்கள் சங்கம் பாராட்டு

Published On 2023-09-16 08:10 GMT   |   Update On 2023-09-16 10:02 GMT
  • ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை:

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என். கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்காகவும் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்காகவும் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை அறிவித்து குடும்ப தலைவிகளுக்கு நேற்று முதல் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினால் ஏராளமான ஏழை பெண்கள், பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் முதல்வர் அவர்கள் நிலத்தரகர் தொழிலையும் அங்கீகாரம் செய்து தந்து நிலத்தரகர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News