தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன- சீமான்

Published On 2024-07-07 08:45 GMT   |   Update On 2024-07-07 09:17 GMT
  • ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது.
  • சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?

சென்னை:

பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். இதன்பின், பேசிய சீமான் கூறியதாவது:-

* இப்படி ஒரு சூழல் வரும்என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

* தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன.

* ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது.

* சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மாநிலத் தலைவரை தலைநகரிலேயே கொல்ல முடியும் என்றால் கிராமத்தில் இருப்பவர்களின் நிலையை யோசிக்க வேண்டும்? தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றார்.

Tags:    

Similar News