தமிழ்நாடு

ஜனாதிபதி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை கன்னியாகுமரி வருகை

Published On 2023-03-17 07:59 GMT   |   Update On 2023-03-17 07:59 GMT
  • ஜனாதிபதி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கேரளா புறப்பட்டு சென்றதும் கவர்னர் ஆர்.என். ரவி சென்னை புறப்பட்டு செல்கிறார்.
  • கவர்னர் வருகையையொட்டியும் கன்னியாகுமரியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி:

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (சனிக்கிழமை) காலை கன்னியாகுமரி வருகிறார்.

அவரை வரவேற்பதற்காகவும் அவரது சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் அவரை வரவேற்கிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் மாலை 6.20 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன்மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன் பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசெல்கிறார். அங்கு அவர் பயபக்தியுடன் சாமிகும்பிடுகிறார். இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

மறுநாள் காலையில் கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்கிறார். அதன் பிறகு அவருடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார். ஜனாதிபதி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கேரளா புறப்பட்டு சென்றதும் கவர்னர் ஆர்.என். ரவி சென்னை புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் வருகையையொட்டியும் கன்னியாகுமரியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News