தமிழ்நாடு

தண்டராம்பட்டு அருகே நடுரோட்டில் வாலிபர் வெட்டிக் கொலை

Published On 2023-05-30 06:15 GMT   |   Update On 2023-05-30 06:15 GMT
  • சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தேவனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் அருள் என்கிற அருள்குமார் (வயது 37). இவர் அந்த பகுதியில் பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அருள் திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இரவு 11 மணிக்கு மணலூர்பேட்டை ரோட்டில் உள்ள தேவனூர் புதூர் அருகே வந்த போது அவரை மர்ம நபர்கள் வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அருள்குமாரை கத்தி அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் பலத்த காயமடைந்த அருள்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.

சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News