தமிழ்நாடு

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு- குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2024-08-30 08:28 GMT   |   Update On 2024-08-30 08:29 GMT
  • பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • புலியருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை இல்லை.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 6 மில்லி மீட்டர், மணிமுத்தாறு பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை பகுதியில் 19, கருப்பாநதி பகுதியில் 1.50, குண்டாறு பகுதியில் 32.80, அடவிநயினார் பகுதியில் 16 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தற்போது குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவிக்கரையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் புலியருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை இல்லை

குற்றாலத்தில் தற்போது சீசன் முடிவடைந்து விட்ட நிலையில் அருவிகளில் மீண்டும் தண்ணீர் விழத் தொடங்கி இருப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News