தமிழ்நாடு

இளைஞரணி மாநாடு வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-01-18 05:15 GMT   |   Update On 2024-01-18 05:15 GMT
  • சேலம் மாநாட்டுத்திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-கலைஞரின் உருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.
  • கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம்.

சென்னை:

தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

பாசிச இருளகற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத்திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-கலைஞரின் உருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.

இந்த சுடர், சென்னை-காஞ்சிபுரம்-விழுப்புரம்-கள்ளக்குறிச்சி-சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன் பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்பட உள்ளது.

சேலம் மாநாட்டுத்திடலில் வரும் ஜனவரி 20-ந் தேதி மாலை இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்க உள்ளேன்.

கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம்-பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News