தமிழ்நாடு (Tamil Nadu)

விஜய் கட்சி மாநாடு- 21 கேள்விகளை எழுப்பி புஸ்சி ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பிய போலீசார்

Published On 2024-09-02 06:16 GMT   |   Update On 2024-09-02 06:16 GMT
  • நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் வருகின்ற 23-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.
  • சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது.

விழுப்புரம்:

தமிழக வெற்றிக்கழகத்தினை தொடங்கி உள்ள நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் வருகின்ற 23-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.

மாநாடு நடைபெறுவதற்கு 85 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு 6 நாட்களை கடந்த நிலையில், விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் மாநாடு நடைபெறும் இடத்தில் மாநாட்டு மேடை எவ்வளவு நீளம், அகலத்தில் அமைக்கப்படுகிறது. எந்த பகுதியிலிருந்து எவ்வளவு பேர் வருகை புரிவார்கள் அவர்களுக்கு இருக்கைகள் எவ்வளவு அமைக்கப்பட உள்ளது.

பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு மாநாட்டில் வாகனங்கள் நிறுத்த எந்த பகுதிகள் ஒதுக்கி பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது.

வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்தால் குடிநீர் வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி எங்கு செய்யப்படுகிறது. 85 ஏக்கர் நிலம் குத்தகை பெறப்பட்டுள்ளதால் அவர்களிடம் உரிய அனுமதிக்கான கடிதம் எத்தனை நபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது என 21 கேள்விகள் அடங்கிய நோட்டீசை டி.எஸ்.பி. சுரேஷ் விக்கிரவாண்டி காவல் சப்-இன்ஸ்பெக்டர் மூலமாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் விளக்கமளித்த பின் மாநாட்டிற்கான அனுமதி அளிக்கப்படுமா, மறுக்கப்படுமா என்பது தெரியவரும்.

மாநாட்டிற்கு அனுமதியை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆராய்ந்து தெரிவிப்பார் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News