தமிழ்நாடு

வாக்காளர் பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது- தமிழக தேர்தல் ஆணையம்

Published On 2024-09-09 16:06 GMT   |   Update On 2024-09-09 16:06 GMT
  • ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும்.
  • முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாருக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

வாக்களார் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்களை தேர்தல் துறையால் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

இதற்கு, விளக்கம் அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில், "சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது. முகவரி மாற்றம், மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே பெயர்கள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 2 வார காலம் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது.

ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் அளிக்கும் படிவம் 7ன் அடிப்படையில் பெயர் நீக்கப்படும். வீடுகளில் வாக்காளர்கள் இல்லாமல் இருப்பது, ஒவ்வொரு முறையும் வாக்குச்சாவடி அலுவலர்களால் உறுதி செய்யப்படுகிறது.

முகவரி மாற்றம் என்பது, வாக்குச்சாவடி அலுவர்களின் கள ஆய்வின்போது கண்டறியப்படுகிறது" என்றார்.

Tags:    

Similar News