தமிழ்நாடு

'உலக டிராபிக் சிக்னல்' தினம் - சென்னையில் இதய வடிவில் ஒளிரும் சிக்னல் லைட்

Published On 2024-08-05 09:09 GMT   |   Update On 2024-08-05 09:09 GMT
  • ஆகஸ்ட் 5 ஆம் தேதி சர்வதேச டிராபிக் சிக்னல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இப்போது இருக்கும் டிராபிக் சிக்னல் அமைப்பை வில்லியம் பாட்ஸ் 1920 ஆம் ஆண்டு உருவாக்கினார்.

சர்வதேச டிராபிக் சிக்னல் தினத்தையொட்டி சென்னையில் டிராபிக் சிக்னல்களில் உள்ள விளக்குகள் ஹார்ட்டின் வடிவில் ஒளிரவிட பட்டுள்ளது வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

110 வருடங்களுக்கு முன்பு 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகின் முதல் டிராபிக் சிக்னல் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது என்று நம்பப்படுகிறது.

அதன் காரணமாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி சர்வதேச டிராபிக் சிக்னல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் நாம் இப்போது பயன்படுத்தி வரும் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறத்திலான டிராபிக் சிக்னல் அமைப்பை டெட்ராய்ட் காவல்துறை அதிகாரியான வில்லியம் பாட்ஸ் என்பவர் 1920 ஆம் ஆண்டு உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News