தமிழ்நாடு (Tamil Nadu)

டயர் வெடித்து லாரிக்கு அடியில் சிக்கிய கார்- 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

Published On 2024-10-26 14:56 GMT   |   Update On 2024-10-26 14:56 GMT
  • காரின் டயர் வெடித்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் அடியில் புகுந்து நசுங்கியது.
  • காரில் பயணித்த 6 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே சிங்கள மலை என்ற பகுதியில் கார் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் அடியில் புகுந்து நசுங்கியது.

இந்த விபத்தில், காரில் பயணித்த 6 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்தனர்.

உடல்களை கைப்பற்றிய நிலையில் போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனந்தபூரில் உள்ள இஸ்கான் கோவில் பிரதிநிதிகள் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News