தமிழ்நாடு (Tamil Nadu)

வி.சாலையில் மாநாடு நாட்களில் மழை வராமலிருக்க த.வெ.க. வினர் சிறப்பு பூஜை

Published On 2024-10-24 04:30 GMT   |   Update On 2024-10-24 04:30 GMT
  • விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறுகிறது.
  • த.வெ.க. மாவட்ட துணை தலைவர் வடிவேல், கிளை நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் .

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நாட்களில் மழை வராமல் இருக்க சிறப்பு பூஜை செய்தனர் .

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறுகிறது. மாநாடு நாட்களில் மழை வராமல் இருக்க வி.சாலையிலுள்ள ஏரிக்கரை அய்யனாரப்பன் கோவிலில் நேற்று மாலை த.வெ.க. கிளை, கிராம பொது மக்கள் சார்பில் சந்திர சேகர குருக்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தார். பின்னர் அந்த புனிதநீரை மாநாடு திடலில் தெளித்தனர் .

இதில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கேசவன், கடல்துரை, ஜெயசீலன், நாகஜோதி, த.வெ.க. மாவட்ட துணை தலைவர் வடிவேல், கிளை நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News