தமிழ்நாடு (Tamil Nadu)

மேட்டூர் அணை நீர்மட்டம் 106.48 அடியை எட்டியது

Published On 2024-10-27 04:12 GMT   |   Update On 2024-10-27 04:12 GMT
  • அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
  • மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம்:

தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 33,148 கன அடியாக இருந்தது. இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து வினாடிக்கு 30,475 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 2,500 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை 8 மணி அளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 106.48 அடியாக உயர்ந்து உள்ளது. நீர் இருப்பு 73.49 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News