தமிழ்நாடு (Tamil Nadu)

தவெக மாநாட்டில் அனுமதியின்றி நுழைந்த தொண்டர்கள்.... வெளியேற்றும் பவுன்சர்கள்

Published On 2024-10-27 05:12 GMT   |   Update On 2024-10-27 05:12 GMT
  • விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
  • பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

மாநாட்டு திடலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால், 10 மணிக்கு மேல் திடலுக்குள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், முன்கூட்டியே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது, தவெக திடலில் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். இதில், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டுள்ளன.

விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

இந்நிலையில் தவெக மாநாட்டில் அனுமதியின்றி நுழைந்த தொண்டர்களை பவுன்சர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

Tags:    

Similar News