மாநாட்டு திடலுக்கு வருகை தந்த விஜய்- குழுவினருடன் ஆலோசனை
- நாளை காலை 11 மணி முதல் மாநாட்டு திடலுக்குள் பொது மக்களுக்கு அனுமதி.
- தவெக மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே QR CODE வைக்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு திடலுக்கு கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
விஜய், இன்று மாலை 6 மணியளவில் விஜய் மாநாட்டு திடலுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு திடல் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு குறித்து விஜய் ஆய்வு செய்துள்ளார்.
கேரவனில் பொதுச் செயலாளர் ஆனந்துடன் மற்றும் மாநாடு குழுவினருடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாளை காலை 11 மணி முதல் மாநாட்டு திடலுக்குள் பொது மக்களுக்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவெக மாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதை கண்டறிய விஜய் புது வியூகம் வகுத்துள்ளார்.
தவெக மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே QR CODE வைக்கப்படுகிறது.
மாநாட்டிற்கு வரும் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் அதனை ஸ்கேன் செய்து, வருகை பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.