செய்திகள் (Tamil News)

இந்தோனேசியா: ஜாவா தீவில் நிலச்சரிவு - 11 பேர் உயிருடன் புதைந்து பலி

Published On 2017-04-01 10:22 GMT   |   Update On 2017-04-01 10:22 GMT
இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் உயிருடன் புதைந்து உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஜகர்தா:

இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் உயிருடன் புதைந்து உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள பொனோரோகோ என்ற இடத்திலுள்ள இஞ்சிக் கொல்லையில் இன்று கூலி தொழிலாளர்கள் பதியங்களில் இருந்து இஞ்சியை தோண்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் பல தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பேரிடர் மீட்புப் படையினர் சிலரை உயிருடன் மீட்டனர். இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், புல் டோசர், பொக்லேன் உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியுடன் தொடரந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஜகர்தாவில் இருந்துவரும் முதல்கட்ட செய்திகள் குறிப்பிடுகின்றன.

Similar News