செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக கிரீஸ் நாட்டை சென்றடைந்தார்

Published On 2018-06-16 18:18 GMT   |   Update On 2018-06-16 18:18 GMT
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக இன்று கிரீஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். #RamnathKovind #3NationVisit

ஏதென்ஸ்:

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ், சுரிநாம், கியூபா ஆகிய நாடுகளுக்கு 7 நாள் பயணமாக இன்று புறப்பட்டு சென்றார். முதல் கட்டமாக கீரிஸ் நாட்டிற்கு சென்ற அவருக்கு அந்நாட்டு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது மனைவி சவிதாவும் அவருடன் சென்றுள்ளார்.



16 முதல் 19-ம் தேதி வரை கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்பின் 19 முதல் 21-ம் தேதி வரை சுரிநாம் நாட்டிலும், இறுதியாக 21 மற்றும் 22-ம் தேதிகளில் கியூபா நாட்டிலும் சுற்றுப்பயணம் செய்கிறார். 

அதன்பின் 7 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு கியூபா நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியா வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamnathKovind #3NationVisit
Tags:    

Similar News