செய்திகள் (Tamil News)
கொரோனா பரிசோதனை

மெக்சிகோவில் அடங்காத கொரோனா - 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை

Published On 2020-07-30 20:22 GMT   |   Update On 2020-07-30 20:22 GMT
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மெக்சிகோ சிட்டி:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியைக் கடந்துள்ளது. 6.70 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.08 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 6-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஒரே நாளில் 5,752 பேர் பாதிக்கப்பட்டதால், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் 4 லட்சத்து 8 ஆயிரத்து 449 ஆக உள்ளது. 485 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 361 ஆக அதிகரித்துள்ளது.

2.67 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Similar News