உலகம் (World)

2024-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

Published On 2024-10-09 10:13 GMT   |   Update On 2024-10-09 10:13 GMT
  • நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
  • 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரு அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

அந்த வரிசையில், வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பு கணிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு மூவருக்கு நோபல் விருது வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News