உலகம்

ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் காணாமல் போன 65,000 காபி கோப்பைகள்

Published On 2024-07-13 05:43 GMT   |   Update On 2024-07-13 05:43 GMT
  • எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
  • ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார்.

எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் 65,000 காபி கோப்பைகள் காணாமல் போயுள்ளதாக அந்த ஆலையின் மேனேஜர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில், ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் உலகளவில் அந்நிறுவனத்தின் 10% பணியாளர்களைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்தார். இது டெஸ்லா நிறுவனத்தின் ஜெர்மன் ஊழியர்களை கவலையடையச் செய்தது.

இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் பணிப்பாதுகாப்பு, குறைவான ஊதியம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

.

Tags:    

Similar News