உலகம்

ஒரே நாளில் 23 பற்களையும் பிடுங்கிய மருத்துவர்கள்.. மாரடைப்பால் பறிபோன உயிர்

Published On 2024-09-11 16:28 GMT   |   Update On 2024-09-11 16:28 GMT
  • அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது.
  • எதோ வினோதமான மருத்துவ எக்ஸ்பெரிமெண்ட் போல உள்ளது என்று பலர் தெரிவிக்கினர்.

சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் ஜெய்ஜியாங் [Zhejiang] பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா [Jinhua] நகரில் உள்ள யோங்காங் டேவே Yongkang Deway பல் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹூவாங் [Huang] என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சையானது நடத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்மீடியேட் ரெஸ்டோரேஷன் [Immediate restoration] முறை இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகள் கடந்த சமூக வலைதளத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிழந்தவரின் வயது வெளிப்படுத்தப்படவில்லை.

இதுதொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது அறுவை சிகிச்சை என்பதை விட எதோ வினோதமான மருத்துவ எக்ஸ்பெரிமெண்ட் போல உள்ளது என்று பலர் கூறியுள்ளனர். மேலும் ஒரே நாளில் 10 பற்கள் பிடுங்கப்படுவதே அதிகம் என்று பல் மருத்துவர்கள் தங்களின் அபிப்பிராயங்களைக் கூறி வருகிறனர். 

Tags:    

Similar News