உலகம் (World)

எல்லை ஒப்பந்தத்திற்கு மத்தியில் சீன அதிபரை நாளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

Published On 2024-10-22 16:22 GMT   |   Update On 2024-10-22 16:22 GMT
  • பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றார்.
  • விமான நிலையத்தில், மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில், மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ரஷிய அதிபர் புடினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

இதனிடையே 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் எல்லை பகுதிகளில் ஒன்றாக ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை தற்போது எட்டியுள்ளன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நாளை இருதரப்பு சந்திப்பு நடைபெறும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags:    

Similar News