உலகம் (World)

அவன யாராவது நிறுத்துங்களேண்டா.. தினமும் ஒருவருக்கு ரூ.8 கோடி கொடுத்த மஸ்க் - குட்டு வைத்த கோர்ட்

Published On 2024-10-25 12:16 GMT   |   Update On 2024-10-25 12:16 GMT
  • தினமும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும்
  • தேர்தல் சமயத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மஸ்க் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்தார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள மஸ்க் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார்.

 

துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் மஸ்க் 10 லட்சம் கையொப்பங்களை இலக்காக வைத்துள்ளார்.

எனவே பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த படிவத்தில் கையொப்பம் இடுபவர்களில் தினமும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். அதன்படி சிலருக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.ஆனால் தேர்தல் சமயத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மஸ்க் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

இந்நிலையில் மஸ்க்கை எச்சரித்து அமெரிக்க நீதிமன்றம்எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மஸ்க் செயல்படுத்தியுள்ள இந்த திட்டம் அமெரிக்க சட்டங்களை மீறுவதாகவும் மக்களின் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் செயலாகவும் உள்ளதால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

அரசியல் சட்டத்தை மீறும் எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு நீதித்துறையில் சிவில் குற்றவியல் சட்டத்துக்கு உட்பட்டது. எனவே அவருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கவும் கூடும் என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

Tags:    

Similar News