உலகம் (World)

இலங்கையின் 3 ஆவது பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

Published On 2024-09-24 10:19 GMT   |   Update On 2024-09-24 10:19 GMT
  • இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவி ஏற்றுக் கொண்டார்.
  • இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். இவர் இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார்.

கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் அதிபர் அனுர குமார திசநாயக முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Tags:    

Similar News