செய்திகள் (Tamil News)

இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தம்

Published On 2019-06-04 12:48 GMT   |   Update On 2019-06-04 12:48 GMT
இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மழை குறுக்கீட்டால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வந்தது.

இந்நிலையில் 33 ஆவது ஒவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News