இந்தியா (National)

ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்த பாடுபடுகிறோம்- பிரதமர் மோடி

Published On 2024-10-20 16:28 GMT   |   Update On 2024-10-20 16:28 GMT
  • பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும்.
  • வேலைவாய்ப்புகளை உருவாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி இன்று சுமார் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

மேலும், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2,870 கோடி மதிப்பில் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் புதிய முனைய கட்டிடம் மற்றும் தொடர்புடைய பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும். அவ்வாறு அதிகாரம் பெறும்போது, சமூகமும் வளர்ச்சியடையும்.

பெண்களுக்கு பாஜக அரசு புதிய பலத்தை அளித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்த பாடுபடுகிறோம்.

மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளோம். நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்களே அரசின் முதன்மையான முன்னுரிமை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News