செய்திகள் (Tamil News)
இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டம்- தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பீல்டிங் செய்கிறது
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்ப்டனில் நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது.
தென் ஆப்பிரிக்கா தாங்கள் விளையாடிய 2 ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து உள்ளதால் வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரம் காட்டும். இந்திய அணியும் முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி உலக கோப்பை வென்ற இரு முறையும் தாங்கள் பங்கேற்ற முதல் ஆட்டத்தை வெற்றியோடு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர்குமார்.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, டு பிளசிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டுமினி , தப்ரைஸ் ஷம்சி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா, இம்ரான் தாஹிர்.