புதுச்சேரி

திருபுவனை கூட்டுறவு நூற்பாலை இயங்காமல் மூடியிருக்கும் காட்சி.

திருபுவனை கூட்டுறவு நூற்பாலை மூடல்

Published On 2022-06-14 08:27 GMT   |   Update On 2022-06-14 08:27 GMT
  • திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் மூலப்பொருட்கள் இல்லாத காரணத்தினால் உற்பத்தி முடங்கியது.
  • இந்த முடிவை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது.

புதுச்சேரி:

திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் மூலப்பொருட்கள் இல்லாத காரணத்தினால் உற்பத்தி முடங்கியது. மறு தேதி அறிவிக்கும் வரை ஆலை மூடப்பட்டுள்ளது.

திருபுவனையில் இயங்கிவரும் புதுவை கூட்டுறவு நூற்பாலை ஷிப்ட்டில் இருந்து தொழிலாளருக்கு லே-ஆப் விடப்பட்டுள்ளது.

நூற்பாலை உற்பத்திக்கு தேவையான பஞ்சு கொள்முதல் தாமதமாக கிடைப்பதால் இந்த முடிவை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது.

ஆலைக்கு வர வேண்டிய பஞ்சு தற்போது ஒப்பந்ததாரர்கள் மூலம் கிடைப்பது தாமதமாகி உள்ளதால் தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருட்கள் கிடைக்காமல் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சு வரத்து வர உள்ளதாகவும், அதற்குப்பின் ஆலை வழக்கம்போல் இயங்கும் என்று தொழிலாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

புதுவை மாநில அளவில் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கின்ற பஞ்சாலைகள் மூடப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது திருபுவனை கூட்டுறவு நூற்பாலை மூலப்பொருள்கள் வராததால் உற்பத்தி பாதிப்பு என்ற காரணத்தைக் காட்டி, தற்போது ஆலையின் நிர்வாகம் ஆலையை மூடியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News