புதுச்சேரி

சாலை சீரமைப்பு பணியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்த காட்சி.

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணி

Published On 2023-11-09 06:07 GMT   |   Update On 2023-11-09 06:07 GMT
  • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
  • சாலைகள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது.

புதுச்சேரி:

மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி குமாரபாளை யத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இப்பணியை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம் ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News