புதுச்சேரி

கோப்பு படம்.

மீன் பிடிக்க சென்ற டெய்லர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-05-27 08:26 GMT   |   Update On 2023-05-27 08:26 GMT
  • வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தனர்.
  • அவரது மகன் விநாயகமூர்த்தி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புதுச்சேரி:

வானூரை அடுத்த செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 52) டெய்லர் வேலை செய்து வந்தார்.  9 மணிக்கு கொடுக்கூர் ஆற்றங்கரைக்கு மீன்பிடிக்க சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு முருகன் மயங்கிய நிலையில் இறந்த கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் விநாயகமூர்த்தி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News