புதிய கேஜெட்டுகள்

மோட்டோவின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2024-06-18 07:55 GMT   |   Update On 2024-06-18 07:55 GMT
  • மோட்டோ எட்ஜ் 50 அல்ட்ரா மாடலில் 50MP பிரைமரி கேமரா உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எட்ஜ் 50 அல்ட்ரா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.7 இன்ச் 1.5K 144Hz OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 64MP 3x போர்டிரெயிட் டெலிபோட்டோ லென்ஸ், 50MP ஆட்டோஃபோக்கஸ் செல்பி கேமரா உள்ளது. இத்துடன் மோட்டோ ஏ.ஐ. மூலம் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

 


இந்த ஸ்மார்ட்போன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது. இதில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி ஹெட் டிராக்கிங் வசதி உள்ளது. இந்த வசதிகள் மோட்டோ பட்ஸ் பிளஸ் பயன்படுத்தும் போது ஆக்டிவேட் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 125 வாட் டர்போ பவர் சார்ஜிங் மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News