அறிந்து கொள்ளுங்கள்

பயனர் விவரங்களை சேகரிக்கும் புதிய அம்சம் - ரியல்மி விளக்கம்!

Published On 2023-06-20 02:25 GMT   |   Update On 2023-06-20 02:25 GMT
  • ரியல்மி நிறுவனம் பயனர் விவரங்களை சேகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் விசாரனை மேற்கொள்ளும் என்று மத்திய மந்திரி கருத்து.

பயனர் விவரங்களை சேகரிப்பதாக ரியல்மி நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. டுவிட்டர் பயனர் ஒருவர் ரியல்மி சாதனங்கள் பயனர் விவரங்களை சேகரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் விசாரனை மேற்கொள்ளும் என்று தெரிவித்து உள்ளார்.

குற்றச்சாட்டுகளுடன் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் தனது பதிவில் இணைத்து இருக்கிறார். அதன்படி ரியல்மி யுஐ 4.0 -இல் உள்ள என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் (Enhanced Intelligent Services) அம்சம் மூலம் பயனர் விவரங்களை மேம்படுத்துவதாக கூறி அவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக டுவிட்டர் பயனர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

ரியல்மி யுஐ 4.0 வெர்ஷனில் உள்ள என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் விவர குறிப்பில், 'இந்த அம்சம் சாதனத்தின் விவரங்கள், செயலி பயன்பாட்டு தகவல், லொகேஷன் விவரங்கள், காலென்டர் நிகழ்வுகள், எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகள்' தொடர்பான விவரங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக சேகரிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த அம்சம் ஸ்மார்ட்போன்களில் தானாக செயல்படுத்தப்படுகிறதா அல்லது பயனர் அனைத்து அனுமதிகளையும் வழங்க வேண்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது தொடர்பாக ரியல்மி பதில் அளித்துள்ளது. அதில் இந்த அம்சம் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பெறப்படுவதாகவும், பயனர் விவரங்கள் அதிகளவு பாதுகாப்பாக வைக்கப்படுவதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது.

Tags:    

Similar News