டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

Published On 2023-08-19 00:01 GMT   |   Update On 2023-08-19 00:01 GMT
  • பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
  • இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் வென்றார்.

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் நாட்டு வீராங்கனை மார்கெடா வாண்ட்ருசோவாவுடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News