டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்வியாடெக், சபலென்கா
- இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
- இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காஃப் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று அதிகாலை நடைபெற்ற 2-வது அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் டேனில் காலின்சுடன் மோதினார்.
இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், சபலென்கா மோதுகின்றனர்.