டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், சபலென்கா

Published On 2024-05-14 02:07 GMT   |   Update On 2024-05-14 02:07 GMT
  • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் 1 வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
  • மற்றொரு போட்டியில் பெலாரசின் சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.

ரோம்:

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் கெர்பரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் காலிறுதியில் மேடிசன் கீஸ் உடன் மோத உள்ளார்.

மற்றொரு போட்டியில் பெலாரசின் சபலென்கா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை 4-6, 6-1, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News