என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
2வது போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி - டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 704 ரன்கள் எடுத்தது.
- குசால் மெண்டிஸ், நிசான் மதுஷ்கா இரட்டை சதமடித்தனர்.
காலே:
இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து 492 ரன்னில் ஆல் அவுட்டானது. பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கர்டிஸ் கேம்பெர் 111 ரன்னில் வெளியேறினார். கேப்டன் பால்பிரின் 95 ரன்னில் அவுட்டானார். டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இது முதல்முறையாகும்.
இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நிசான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ் இரட்டை சதமடித்தனர். மதுஷ்கா 205 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 245 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கருணரத்னே 115 ரன்னில் அவுட்டானார். மேத்யூஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 212 ரன்கள் பின்தங்கிய நிலையில், அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 5ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததால் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன.
ஹாரி டெக்ட்ர் அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். பால்பிரின் 46 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், அயர்லாந்து 2வது இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் டெஸ்ட் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருது பிரபாத் ஜெயசூர்யாவுக்கும், தொடர் நாயகன் விருது குசால் மெண்டிசுக்கும் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்