search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விராட் கோலி, ரோகித் சர்மா இடத்தை நிரப்ப முடியாது: கபில் தேவ் புகழாரம்
    X

    விராட் கோலி, ரோகித் சர்மா இடத்தை நிரப்ப முடியாது: கபில் தேவ் புகழாரம்

    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றனர்.
    • அந்த இருவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என கபில் தேவ் கூறினார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதையடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர். அதேசமயம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என தெரிவித்துள்ளனர்

    டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

    இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.டோனியை போன்று விராட் கோலி, ரோகித் சர்மாவின் இடத்தையும் இந்திய அணியில் யாராலும் நிரப்ப முடியாது என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கபில் தேவ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இந்திய அணியில் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வேலையாட்கள். தற்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுள்ளனர்.

    அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தமக்கென்று தரத்தை உருவாக்கிய விராட் கோலியை இந்தியா கண்டிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிஸ் செய்யும்.

    அந்த இருவருமே சச்சின், தோனியைப் போன்றவர்கள். அந்த இருவரின் இடத்தை யாரையும் வைத்து மாற்றமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×