search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 193 ரன்களை குவித்தது.
    • முகமது ரிஸ்வான், பகர் சமான் அரை சதமடித்து அசத்தினர்.

    ஷார்ஜா:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    ஷார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடந்த 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்துள்ளது. ரிஸ்வான் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பகர் சமான் 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய குஷ்தில் ஷா 5 சிக்சர் உள்பட 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே ஹாங்காங் அணி விக்கெட்டுகள் விழுந்தன.

    அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். உதிரியாக கிடைத்த 10 ரன்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதியில், ஹாங்காங் அணி 38 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

    பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 4 விக்கெட்டும், முகமது நவாஸ் 3 விக்கெட்டும், நசீம் ஷா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 193 ரன்களை குவித்தது.

    ஷார்ஜா:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    ஷார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பாபர் அசாம் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய பகர் சமான், முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். பகர் சமான் 53 ரன்னில் அவுட்டானார். கடைசி ஓவரில் குஷ்தில் ஷா 4 சிக்சர் அடித்து அசத்தினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்துள்ளது. ரிஸ்வான் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்குகிறது.

    • ஆசிய கோப்பையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    துபாய்:

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    இந்திய அணி தான் ஆடிய 2 போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

    ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை முன்னேற்றம்.
    • முதலில் விளையாடிய வங்காளதேசம் அணி 183 ரன்கள் குவித்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    அந்த அணி வீரர் ஆசிப் உசைன் அதிகபட்சமாக 39 ரன்கள் விளாசினார். மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். நிசாங்கா20 ரன்கள் அடித்தார். கேப்டன் தசுன் ஷனகா 45 ரன்கள் குவித்தார். கருணாரத்னே 10 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார்.

    இலங்கை அணி 19.2 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

    • வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஆசிப் உசைன் 39 ரன்கள் விளாசினார்.
    • இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய ஆசிப் உசைன் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.. மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது. இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    • ஆசிய கோப்பை தொடரில் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடாததால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
    • சூழ்நிலைக்கு ஏற்ப எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தகவல்

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி நேற்று ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சூர்யகுமார் யாதவ், 26 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். துவக்க வீரர் கே.எல்.ராகுல் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடிய நிலையில், சூர்யகுமாரின் அதிரடி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஹாங்காங் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். இதனால் அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா டி20 போட்டிகளில் அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாடி தனது பலத்தை நிரூபிக்க முயற்சிக்கும் நிலையில், கே.எல்.ராகுலின் அணுகுமுறை அதற்கு முரணாக இருப்பதாக கருத்துகள் வலம்வந்தன.

    போட்டி முடிந்தபின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது சூர்யகுமாரின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதாவது, டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் நீங்கள் துவக்க வீரராக களமிறங்குவீர்களா? என்று அந்த செய்தியாளர் கேட்டார்.

    அப்போது குறுக்கிட்ட சூர்யகுமார் யாதவ், 'அப்படியென்றால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?' என சிரித்துக்கொண்டே எதிர்கேள்வி கேட்டு மடக்கினார்.

    தொடர்ந்து பேசிய சூர்யகுமார் யாதவ், 'அவரும் (ராகுல்) காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளார். அவருக்கும் அவகாசம் தேவை. எங்களுக்கு இப்போது சிறிது அவகாசம் கிடைத்திருக்கிறது. நான் முன்பே கூறியதுபோல், நான் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். இதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் தெரிவித்துள்ளேன். நான் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பதை அவர்கள்தான் உறுதி செய்வார்கள்' என்றார்.

    • சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் ஆறு பவுண்டரி ஆறு சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார்.
    • தொடக்கத்திலேயே பேட்டிங் நன்றாக இருந்ததாக ரோகித் சர்மா பாராட்டு

    துபாய்:

    ஆசிய கோப்பை போட்டியில் ஆங்காங்கை வீழ்த்தி இந்திய அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றது. துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது.

    சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 68 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்), வீராட் கோலி 44 பந்தில் 59 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), லோகேஷ் ராகுல் 36 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஆங்காங் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 40 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    பாபர் ஹயாத் அதிகபட்சமாக 35 பந்தில் 41 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) கின்ஷிட் ஷா 30 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, அவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    தொடக்கத்திலேயே எங்களது பேட்டிங் நன்றாக இருந்தது. இறுதியில் நல்ல ஸ்கோரை குவித்தோம். பந்து வீச்சு பொறுப்பான முறையில் இருந்தது. பந்து வீச்சில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்து இருக்கலாம்.

    சூர்யகுமார் யாதவின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. அவரை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை. தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் பேட்டிங் செய்கிறார். அவர் ஆடிய ஷாட்கள் ஒவ்வொன்றும் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு விளையாடி வருகிறார்கள்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    • ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்தில் உள்ளார்.
    • பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இதில், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்த பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

    இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி உள்ளார். 2-வது இடத்தில் வங்காளதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் நீடிக்கிறார். 3-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி உள்ளார்.

    அதேபோல், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும், ரிஸ்வான் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

    அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் நீடிக்கிறார். இந்த பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 8-வது இடத்தில் உள்ளார்.

    • முதலில் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.
    • விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ்

    68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கே.எல்.ராகுல் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. பாபர் ஹயாத் 41 ரன்னும், கிஞ்சித் ஷா 30 ரன்னும், செஷான் அலி 26 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஹாங்காங் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

    • விராட் கோலி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
    • சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று, துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. ராகுல் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    அவரைத் தொடர்ந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்டு, ஹாங்காங் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.

    விராட் கோலி

    விராட் கோலி

    விராட் கோலி இந்த தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 40 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். சர்வதேச டி20 போட்டிகளில் அவருக்கு இது 31வது அரை சதமாகும். மறுமுனையில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார்.

    மிக குறைந்த பந்துகளில் அதாவது 22 பந்துகளில் அரைசதம் அடித்து ஆச்சரியப்படுத்திய சூர்யகுமார் யாதவ், அடுத்த பந்திலும் சிக்சர் அடித்து, ஹாட்ரிக் சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 5வது பந்திலும் ஒரு இமாலய சிக்சரை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் அவர் 6 சிக்சர் உள்பட 26 ரன்கள் விளாசினார்.

    20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோலி 59 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்குகிறது. 

    • துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஹாங்காங் அணி முதலில் பந்து வீச முடிவு
    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஹாங்காங் அணி பந்து வீசுவதற்கு முன்னுரிமை அளித்திருக்கிறது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

    ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), பாபர் ஹயாத், யாசிம் முர்தாசா, கிஞ்சித் ஷா, ஸ்காட் மெக்கெக்னி (கீப்பர்), ஹாரூண் அர்ஷாத், அய்சாஸ் கான், ஜீஷன் அலி, எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்பர்.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
    • இதன் 4வது லீக் போட்டியில் இந்தியாவும், ஹாங்காங்கும் இன்று மோதுகிறது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்குடன் 2 முறை மோதி இருக்கிறது. இதில் 2008-ம் ஆண்டில் 256 ரன்கள் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்குக்கே அனுகூலமாக இருப்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீசுவதற்கே முன்னுரிமை அளிக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவி பிஷ்னோய் அல்லது அஸ்வின், ஆவேஷ்கான், அர்ஷ்தீப் சிங்.

    ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), யாசிம் முர்தசா, பாபர் ஹயாத், கின்சித் ஷா, ஸ்காட் மெக்கன்சி, அய்ஜாஸ் கான், இசான்கான், ஆயுஷ் சுக்லா, ஜீஷன் அலி, முகமது ஹசான்பர், ஹரூன் அர்ஷாத்.

    ×