search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
    • சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்

    கோவை:

    சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

    அதில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

    அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை அன்றைய தினமே கோவை அழைத்து வந்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சவுக்குசங்கரை கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போது, அவ ரது காரில் இருந்து கஞ்சா வையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் சவுக்குசங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோவை க்கு வந்து, கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை கஞ்சா வழக்கிலும் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

    அதனை தொடர்ந்து நேற்று, அவரை கஞ்சா வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து மதுரைக்கு பழனிசெட்டி பட்டி போலீசார் அழைத்து சென்றனர். மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமலச் செல்வன், சவுக்கு சங்கரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர் கோவை மத்திய ஜெயிலுக்கு கொண்டு வந்து அடைக்க ப்பட்டார்.

    இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே சேலம், திருச்சி யில் பெண் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை, அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை போலீசார் இன்று கோவை ஜெயிலுக்கு வந்து சவுக்கு சங்கரிடம் வழங்கினர்.

    இதேபோல் நாகையிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே பெண் போலீசார் குறித்து அவ தூறு கூறியதாக 6 வழக்கு கள் மற்றும் தேனியில் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசி றியை சேர்ந்த டி.எஸ்.பி யாஸ்மின் என்பவர் திருச்சி சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைதான சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கோவை 4-வது ஜூடிசியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 7-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கினை 10-ந் தேதி நாளை விசாரி ப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கு நாளை கோவை 4-வது ஜூடிசியல் கோர்ட்டில் வர உள்ளது.

    அப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியவரும். அப்படியே ஒரு வேளை கோவை போலீசார் கைது செய்த வழக்கில் இருந்து அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், தற்போது புதிதாக போடப்ப ட்டுள்ள வழக்குகளில் ஏதாவது ஒன்றில் அவரை மீண்டும் கைது செய்வ தற்கும் வாய்ப்புகள் அதிக மாக உள்ளது.

    இப்படி ஒவ்வொரு நாளும் புதிது, புதிதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதியப்பட்டு வரும் வழக்குகளால் சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்க கோரி சவுக்கு மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கூடாது என தடைவிதிக்கக் கோரி 3-வது நபர் எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்? யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி தள்ளுபடி செய்தார்.

    இதேபோல் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி அவரது தாயார் கமலா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி ஆகியோர், கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கர் காயம் அடைந்துள்ளாரா என்பது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

    அதன்படி சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல்கள், அரசு மருத்துவர்கள் அட ங்கிய குழுவினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த அறிக்கையை அவர்கள் தனித்தனியாக சீலிடப்பட்ட கவரில் வைத்து கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    • 2 பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக அவர் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.
    • உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்று 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

    கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் 82 வயது மூதாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி, முதல் முயற்சியிலேயே 5-ம் இடத்தை பெற்று அசத்தியுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் மகள் தேவி மற்றும் பேரன்கள் ரித்திக், ரோஹித் ஆகியோருடன் கிட்டம்மாள் வசித்து வருகிறார்.

    இவரது பேரன்களான ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் தனது பேரன்களை பார்த்து தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கிட்டம்மாள் ஆசைபட்டுள்ளார்.

    2 பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக அவர் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதன்பின் உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்று 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

    கிட்டம்மாளின் ஆர்வத்தைக் கண்டு உடற்பயிற்சியாளர் சதீஷ், கோவையில் கடந்த மே 1-ம் தேதி "Indian fitness federation" சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற பாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய கிட்டம்மாள், "பெண்கள் எதையும் துணிச்சலுடன் செய்ய வேண்டும். எனது ஆர்வத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எனது உணவு முறையே காரணம். பேரன்கள் மற்றும் உடற்பயிற்சியாளரின் துணையோடு பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றேன். எனது கணவர் ஊட்டசத்து உணவுகளை எனக்கு வாங்கி கொடுத்து வெற்றி பெற ஊக்கமளித்தார்" என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய கிட்டம்மாளின் கணவர் வெட்கட்ராமன், "பெண்கள் சமைத்து தரும் உணவை சாப்பிடுவதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு என்ன பிடிக்கிறது என அறிந்து நடப்பதுதான் நல்ல கணவரின் கடமை. தனது மனைவி இன்னும் பல சாதனைகளை படைப்பார்" என்று அவர் தெரிவித்தார்.

    • ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • ஜூன் 6-ந்தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

    கோவை:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் வேளாண்மை தோட்டக்கலை உள்ளிட்ட 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட 6 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து இந்த மாணவர்சேர்க்கை நடைபெறும்.

    இந்த 3 கல்வி நிறுவனங்களிலும் ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை பயில நினைக்கும் மாணவர்கள் ஒரேயொரு விண்ணப்பத்தை இணையவழியில் பூர்த்தி செய்து அனுப்பினால் போதுமானது.

    விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

    மாணவர்களுக்கான வழி காட்டுதல்கள், மாணவர் சேர்க்கைக்கான வழி முறைகள் உள்ளிட்ட விவரங்களை www.tnau. ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக்கல்லூரிகளில் 14 பட்டப் படிப்புகளுக்கும் சேர்த்து 2,555 காலி இடங்களும், 28 இணைப்புக் கல்லூரிகளில் 2,806 காலியிடங்களும் உள்ளன. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படிப்புக்கு 240 இடங்களும், தோட்டக்கலை படிப்புக்கு 100 இடங்களும் உள்ளன.

    மீன்வளப் பல்கலைக் கழகத்தில் 6 பட்டப் படிப்புகள், 3 தொழில்கல்வி பட்டப்படிப்புகளில் மொத்தம் 345 இடங்களும், 57 சிறப்பு இடஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

    மாணவர்கள் வரும் ஜூன் 6-ந்தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். கலந்தாய்வுக்கான தேதி, செயல் முறைகள் போன்ற வை பல்கலைக்கழக இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும்.

    வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 94886 35077, 94864 25076 என்ற எண்களிலும், மீன் வளப் பல்கலைக்கழகம் தொடர்பான விவரங்களுக்கு 04365 - 256430, 94426 01908 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குறைவான வருமானம் கொண்டவர்களும் ஏசி வாங்கும் சூழல் உருவாகி உள்ளது.
    • தற்போது 500 முதல் 2000 வரை ஏசி எந்திரங்கள் விற்பனையாகி உள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதமான தட்ப வெப்பநிலை நிலவும் கோவை மாவட்டத்தின் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.

    பகல் நேரங்களிலும் வெப்ப அலை வீசுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கோடை வெயில் காரணமாக புழுக்கம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதனால் ஏர் கண்டிஷன் வாங்குவோரின் எண்ணிக்கையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே வேளையில் ஏர் கூலர்கள் டவர் பேன்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    இது தொடர்பாக ஏசி, ஏர் கூலர்கள் விற்பனை செய்யும் கடையினர் கூறியதாவது:-

    கோடை வெயில் காரணமாக கோவையில் ஏசி விற்பனை அதிகரித்துள்ளது. ஏசி எந்திரங்களை நடுத்தர மக்கள் வாங்கி வந்த நிலை மாறி குறைவான வருமானம் கொண்டவர்களும் ஏசி வாங்கும் சூழல் உருவாகி உள்ளது.

    1 டன் ஏசி ரூ.30 ஆயிரம் முதல் கிடைக்கி றது. தவணை முறையில் கடனை திருப்பி செலுத்தும் வசதி இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ஏசி வாங்குவது உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டில் மாதம் 800 முதல் 1300 ஏசி எந்தி ரங்கள் விற்பனையாகி வந்தன. தற்போது நடப்பாண்டில் 1500 முதல் 2000 வரை ஏசி எந்திரங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஏசி விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளது.

    ஏசி எந்திரங்களின் தேவை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இதனால் ஏசி எந்திரங்களின் இருப்பு குறைந்து விற்பனையும் பாதித்துள்ளது. மேலும் ஏசி எந்திரங்கள் நிறுவ 7 நாட்கள் ஆகின்றன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஏசி டெக்னீசியன்கள் கூறும்போது வெளியில் இருக்கும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப ஏசி அளவை வைக்க வேண்டும். 25 டிகிரி செல்சியஸ் வைப்பது தான் சிறந்தது. அறைக்கு தேவையான குளிர்ச்சியை தருகிறது. மின் சேமிப்பையும் உறுதி செய்கிறது என்றனர்.

    • அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வந்தார்.
    • விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளி வைப்பு.

    கோவை:

    பிரபல அரசியல் விமர்சகரான சவுக்குசங்கர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.

    மேலும் மகளிர் போலீசார் குறித்தும் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். அதன்பேரில் சவுக்குசங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தொடர்ந்து கடந்த 4-ந்தேதி தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்தனர்.

    இது தொடர்பாக கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சரவணபாபு முன்பு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதேபோல் இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் அவரது வக்கீல் கோபாலகிருஷ்ணன் கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தனது கட்சிக்காரரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சரவணபாபு முன்பு வந்தது இந்த வழக்கு விசாரணையை 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே போலீசார் சவுக்குசங்கரிடம் அவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வழங்கினர்.

    • பொதுமக்கள் மழை பெய்ய வருண பகவானை வேண்டி வந்தனர்.
    • கடந்த சில தினங்களாக கோவை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. பகல் நேரங்களில் அனல் பறக்கும் வெயிலால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    வீட்டிற்குள் இருந்தாலும் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது. மின்விசிறி ஓடினாலும் அதனையும் தாண்டி வீட்டிற்குள் வெப்பம் நிலவி வந்தது.

    கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்காவது நிழல் கிடைத்தால் சற்று நேரம் அங்கு நின்று இழைப்பாறி சென்று வருகின்றனர்.

    வழக்கமாக கோவையில் ஏப்ரல் மாதத்திலேயே கோடை மழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்து மே முதல் வாரம் ஆகியும் இதுவரை மழையே பெய்யவில்லை.

    கடுமையான வெப்பமே நீடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் மழை பெய்ய வருண பகவானை வேண்டி வந்தனர். பல்வேறு இடங்களில் வழிபாடுகள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைப்பது எனவும் நடத்தப்பட்டது.

    கடந்த சில தினங்களாக கோவை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. ஆனால் மாநகர பகுதியில் மழை பெய்யவில்லை. மாறாக சூறைக்காற்று வீசியது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவை மாநகர பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டி தீர்த்தது. பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலையம், அவினாசி சாலை, காந்திபுரம், ராமநாதபுரம், புலியகுளம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், உக்கடம், காந்தி பார்க் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது.

    இந்த திடீர் மழையால் கோவையில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியது. இரவிலும், இன்று காலையும் குளிர்ச்சியான காற்றும் வீசியது.

    கோவையில் இன்று காலையும் வெயில் குறைந்து மேகமூட்டமாகவே காணப்படுகிறது.

    இந்த திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளதால் மழையை எதிர்பார்த்து கோவை மக்கள் காத்திருக்கின்றனர்.

    • யானைகளின் பெயரை கூறி எங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களையும் பறிப்பதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது
    • யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்

    பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு தொண்டாமுத்தூர் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    புதிய யானை வழித்தடம் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டாமுத்தூர் விவசாயிகள் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    "தமிழக வனத் துறை தமிழ்நாட்டில் புதிதாக 42 யானை வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு செய்திதாள்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, தமிழக வனத் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த அந்த வரைவு அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம்.

    அந்த அறிக்கையில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய விவசாய உறுப்பினர்களின் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத் துறை மேற்கொண்ட போது எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களை கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்து இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    எங்களுடைய பெற்றோரும், முன்னோர்களும் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில், எங்கள் பகுதியில் யானைகள் இடம்பெயர்வதை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. சமீப ஆண்டுகளாக யானைகள் ஊருக்குள் வருவது தொடர்பாக செய்திகள் வெளிவருவதற்கு காரணம், வனத்துறையின் நிர்வாக சீர்கேட்டால் தான்.

     யானைகளுக்கு தேவையான உணவுப் பயிர்களை வனப்பகுதிகளுக்குள் பயிர் செய்யாமல் தேக்கு, புளியமரம், ஈட்டி போன்ற மரங்கள் ஏக்கர் கணக்கில் வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிக்குள் வன விலங்குகளுக்கு தேவையான அளவு தண்ணீர் வசதியையும் வனத்துறை உருவாக்கவில்லை. இதன் காரணமாக தான் யானைகள் வனப்பகுதியை விட்டு எங்களுடைய விவசாய நிலத்திற்கு வந்து எங்கள் பயிர்களை நாசம் செய்கிறது.

    எனவே இப்போது யானைகளின் பெயரை கூறி எங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களையும் பறிப்பதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது.

    தொடர்ந்து காலம் காலமாக விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளை யானை வழித்தடம் என பரிந்துரைத்து இருப்பதை நாங்கள் எவ்விதத்திலும் ஏற்று கொள்ளமாட்டோம். யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

    அத்துடன், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை கோவில், அனுவாவி கோவில், பண்ணாரி கோவில், பொன்னூத்து அம்மன் கோவில் என பல இந்து கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள் யானை வழித்தடப் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது எங்களுடைய இந்து மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் முயற்சியாகவும் கருதுகிறோம்.

    எனவே, எவ்வித முறையான கள ஆய்வும், உள்ளூர் மக்களின் கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள 'வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் - மருதமலை' யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

    பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத்துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கோவையில் செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    கோவையில் செயல்பட்டு வரும் எங்களுடைய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இந்தியாவின் முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான தமிழக அரசின் விருதையும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறந்த வளர்ந்து வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருதையும் எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. எங்கள் நிறுவனத்தில் 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் மொத்தம் 5859 ஏக்கரில் சொந்தமாக விவசாயம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து விவசாய உறுப்பினர்களும் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தென்னை, பாக்கு, வாழை மற்றும் காய்கறிகளை பிரதான பயிர்களை விளைவித்து வருகிறோம்.


    தமிழக வனத்துறை தமிழ்நாட்டில் புதிதாக 42 யானை வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு செய்திதாள்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, தமிழக வனத்துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த அந்த வரைவு அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம். அந்த அறிக்கையில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய விவசாய உறுப்பினர்களின் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத்துறை மேற்கொண்ட போது எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களை கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்து இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


    இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    எங்களுடைய பெற்றோரும், முன்னோர்களும் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில், எங்கள் பகுதியில் யானைகள் இடம்பெயர்வதை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. அவ்வாறு யானைகள் அதிகம் இடம்பெயரும் பகுதியாக இருந்தால் எங்களால் இங்கு பல தலைமுறைகளாக விவசாயம் செய்து இருக்க முடியாது.

    எனவே, காலம் காலமாக விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளை யானை வழித்தடம் என பரிந்துரைத்து இருப்பதை நாங்கள் எவ்விதத்திலும் ஏற்று கொள்ளமாட்டோம். யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

    அத்துடன், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை கோவில், அனுவாவி கோவில், பண்ணாரி கோவில், பொன்னூத்து அம்மன் கோவில் என பல இந்து கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள் யானை வழித்தடப் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது எங்களுடைய இந்து மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் முயற்சியாகவும் கருதுகிறோம்.

    எனவே, எவ்வித முறையான கள ஆய்வும், உள்ளூர் மக்களின் கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள 'வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் - மருதமலை' யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம்.

    • ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதமாகின.
    • நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லிங்காபுரம், காந்தையூர் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வாழைப்பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர்.

    நேற்று முதல் கத்தரி வெயில் தொடங்க உள்ள நிலையில் அங்கு காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காந்தையூர், லிங்காபுரம், காரமடை, வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக அந்த பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து சேதமாகின.

    இதுகுறித்து லிங்காபுரம் விவசாயி பிரகாஷ் என்பவர் கூறியதாவது:- எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்து வந்ததால் சிறுமுனை, லிங்காபுரம், காந்தையூர் மற்றும் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழைப்பயிர்களை விளைவித்து வந்தோம்.

    இந்த நிலையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக எங்களில் பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் முறிந்து சேதமாகி உள்ளன. எனவே தமிழக அரசு வாழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    • வருகிற 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ் பெற்றே செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கோவை:

    சமவெளி பகுதிகளில் சுட்டெரித்து வரும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளு,குளு மலை பிரதேசங்களான ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா வருகிற 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது.

    மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த மற்றும் வாடகை வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களிலும் பயணித்து ஊட்டிக்கு வருகின்றனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கோவைக்கு வந்தே ஊட்டிக்கு செல்கின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ் பெற்றே செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊட்டிக்கு வரும் பலர் தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு பஸ்களில் பயணிக்க வாய்ப்புள்ளது. பஸ்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு, கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து நாளை முதல் 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் இருந்து ஊட்டி மற்றும் கூடலூர் வரை அரசு பஸ்களின் புறப்பாடு 80 ஆக உள்ளது.

    தற்போது ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நாளை முதல் கோவையில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்.

    எனவே சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து, அரசு பஸ்களில் பயணித்து கோடைவிழாவை காண நீலகிரிக்கு செல்லலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • முதல் 2 மாதங்கள் மட்டும் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் தொகையை கொடுத்து வந்துள்ளார்.
    • மதுமிதா மீது மோசடி உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை குருடம்பாளையம் அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் மதுமிதா (வயது32).

    இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் நான் என்.பி. என்ற பெயரில் ஆன்லைன் வர்த்த நிறுவனம் தொடங்கி உள்ளேன்.

    அதில் நீங்கள் ரூ.1லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு பணம் தருவதாகவும், வருடத்தின் இறுதியில் முதலீடு செய்த ரூ.1 லட்சத்தையும் திரும்ப தந்து விடுவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

    மேலும் புதிய முதலீட்டாளர்களை அறிமுகம் செய்து வைத்தால், 5 சதவீதம் வரை ஊக்கத் தொகை தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அவரது நிறுவனத்தில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். இவ்வாறாக அவர் பலரிடம் இருந்து ரூ.2 கோடி அளவுக்கு முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது.

    முதல் 2 மாதங்கள் மட்டும் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் தொகையை கொடுத்து வந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

    இதனால் முதலீடு செய்தவர்கள் அவரை தொடர்பு கொண்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. ஒரு சிலர் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று தங்கள் பணத்தை கேட்டுள்ளனர்.

    அப்போது தன்னை மிரட்டுவதாக பணம் கேட்டு வந்தவர்கள் மீதே மதுமிதா போலீசில் புகார் அளித்தார். சில நாட்களில் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. திடீரென தலைமறைவாகி விட்டார்.

    மதுமிதாவை, அவரிடம் முதலீடு செய்தவர்கள் தேடி வந்தனர். அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் முதலீட்டாளர்கள் தவித்தனர். இதுகுறித்து தடாகம் போலீசிலும் அவர்கள் புகார் அளித்தனர். போலீசார் மோசடி செய்த மதுமிதாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்தது. அங்கும் இது போன்று மோசடியில் ஈடுபட்டதும், அங்கு அவர் மீது போலீசில் புகார் அளிக்க இருப்பதை அறிந்ததும், அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு தப்பி வர இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவந்தது.

    அவரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த பாதிக்கப்பட்டவர்கள், மதுமிதாவிடம் பாதிக்கப்பட்ட எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு நபரை கொச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று அந்த நபர், விமான நிலையத்திற்கு சென்று காத்திருந்தார். மதுமிதா விமானத்தை விட்டு இறங்கி வந்ததும், அவரை நேரில் பார்த்த பாதிக்கப்பட்டவர், நான் உங்களுக்கு உதவி செய்வதற்காக வந்துள்ளேன். நான் உங்களை பத்திரமாக காரில் கொண்டு கோவையில் விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    அதனை மதுமிதாவும் உண்மை என நம்பி காரில் ஏறினார். இதையடுத்து இரவில், அந்த நபர் காரில் மதுமிதாவை அழைத்து கொண்டு கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு ஏற்கனவே மதுமிதாவால் பாதிக்கப்பட்ட 20 பேர் நின்றிருந்தனர்.

    அவர்கள் அனைவரும் அவரை சுற்றி வளைத்து, ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.

    ஆனால் போலீசார் இது தொடர்பாக நீங்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மதுமிதாவுடன் கார்களிலேயே இரவு முழுவதும் போலீஸ் வளாகத்திலேயே இருந்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் மதுமிதா திடீரென காரில் இருந்து இறங்கி தப்பியோடினார்.

    இதனை பார்த்த, அவரிடம் முதலீடு செய்தவர்கள் மதுமிதாவை பிடிக்க முயன்றனர். அப்போது நீங்கள் என் அருகே வந்தால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    அதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் மதுமிதாவிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மதுமிதா தன்னுடன் பள்ளியில் படித்த தோழிகளின் பெற்றோர் மற்றும் தன்னுடன் படித்தவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதும், அவர் துபாய்க்கு சென்று விட்டார். அங்கு சென்ற பின்னரும், அங்கிருந்தபடியே ஆன்லைன் மூலமாக சிலரிடம் பங்கு வர்த்தகம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறியும் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளார்.

    இதுதவிர துபாயில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த போது அங்கு வரும் இளைஞர்களிடம் நட்பை ஏற்படுத்தி கொள்ளும் மதுமிதா, அதன்பின்னர் அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும், அதில் ஒரு இளைஞர் போலீசில் புகார் அளிக்க போவதாக தெரிவித்ததும், அங்கிருந்து தப்பி கோவைக்கு வந்ததும் தெரியவந்தது.

    இவர் இதுபோன்று பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையே மதுமிதா மீது கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மினிஜான் பிரதீப் புகார் அளித்தார். அதன்பேரில் மதுமிதா மீது மோசடி உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பருவ கால பழங்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தவறாமல் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம்.

    கோவை:

    தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது சுகாதார துறை பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியிருப்பதாவது:-

    தினமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறைய தண்ணீர் பருக வேண்டும், தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் பருக வேண்டும் என்ற நிலையில் இருக்கக் கூடாது. வெளியில் செல்லும் போதும், பயணத்தின் போதும் குடிநீரை தவறாமல் எடுத்துக் செல்லுங்கள். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உடல் வெப்பத்தினை தணிக்கக் கூடிய ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை சாறு, இளநீர், மோர், பழச்சாறுகள், பருவ கால பழங்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தவறாமல் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மெல்லிய தளர்வாக பருத்தியினால் ஆன வெளிர்நிற ஆடைகளை அணியலாம். மதிய நேரங்களில் வெளியில் செல்லும் போது குடை அல்லது தொப்பி போன்றவற்றை உபயோகப்படுத்தி நேரடி சூரிய வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை தவறாமல் அணிய வேண்டும்.

    நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த பகுதிகளில் இருக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்ப அலைகளை தடுக்கவும், பகலில் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைக்கவும், குளிர்ந்த காற்றை உள்ளே அனுமதிக்க இரவில் அவற்றை திறக்கவும். வெளியில் செல்வதாக இருப்பின் பகல் நேரத்தினை தவிர்த்து காலை அல்லது மாலையில் உங்கள் பணிகளை திட்டமிடவும்.

    கடுமையான வெப்பத்தின் காரணமாக யாரும் எந்த நேரத்திலும் வெப்ப அழுத்தம் மற்றும் வெப்பம் தொடர்பான நோயால் பாதிக்கப்படலாம் என்பதால் கீழ்க்காணும் நபர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள், மனநோய் உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இதயநோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள். குளிர்ந்த காலநிலை பகுதியில் இருந்து வெப்பமான காலநிலை பகுதிக்கு வரும் நபர்கள் தங்களது உடல், வெப்பமான சூழலிற்கு பழகுவதற்கு ஒருவார காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தனியாக வாழும் வயதானவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்களின் உடல் நலம் தினசரி கண்காணிக்கப்பட வேண்டும். பகலில் கீழ்தளங்களில் இருக்க முயற்சி செய்யுங்கள். உடலை குளிர்விக்க மின்விசிறி, ஈரத்துணிகளை பயன்படுத்தவும்.

    வெப்பமான சூழலில் வெயிலில் செல்லும் காலஅளவு குறைத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வெயிலின் கீழ் கடுமையான உடல் செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும், கோடை கால கடுமையான வெப்பமான சூழ்நிலையில் பணிபுரிவோர் நேர இடைவெளி விட்டு பணிபுரிய வேண்டும்.

    பணிபுரியும் இடத்திற்கு அருகில் குளிர்ந்த குடிநீர் வழங்கப்பட வேண்டும், நீரோற்றமாக இருக்க ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் அல்லது அதற்கும் அதிகமாக அடிக்கடி தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

    பணிச்சூழலில் வெப்பநிலையை ஈரப்பதம் மற்றும் சரியான காற்றோட்டம் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம். தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் அந்த நபரை குளிர்ந்த சூழலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் போதுமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும், மதிய வேளைகளில் கடினமான செயல்களை தவிர்க்கவும்.

    மதியவேளையில் சமைப்பதை தவிர்க்க வேண்டும், சமையல் செய்யும் இடத்தை போதுமான அளவு காற்று வரும் பொருட்டு கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறக்கவும்

    மது, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் அல்லது அதிகளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும். இவை அதிக நீர்ச்சத்தை இழக்க வழிவகுக்கும். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம். நிறுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தில் குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ உள்ளே வைத்து விட்டு செல்ல வேண்டாம். வாகனத்தின் உள்ளே வெப்பநிலை ஆபத்தானதாக இருக்கலாம். சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் வாகனங்களை குழந்தைகள் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×